Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கணேசன். இவருக்கு ரேகா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி (வயது8) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர் பாலக்கோடு வட்டத்தில் உள்ள மாரண்டஹாள்ளி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வந்த தர்மபுரி நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.