/* */

வெள்ளோலையில் கிணற்றில் ஆண் சடலம்: தீயணைப்பு துறையினர் மீட்பு

வெள்ளோலையில் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

வெள்ளோலையில் கிணற்றில் ஆண் சடலம்: தீயணைப்பு துறையினர் மீட்பு
X

தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அடுத்த வெள்ளோலை பகுதியை சேர்ந்தவர் சின்னவன்,வயது 63.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் திருமாலுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர் தீயணைப்பு துறையினருக்கும், மதிகோன்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

தகவலின்பேரில் போலீசாரும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இது இந்த உடலை மீட்டனர். இதில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன சின்னவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 May 2022 3:30 AM GMT

Related News