Begin typing your search above and press return to search.
நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தகவல்
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 22.10.2021 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 22.10.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, கொரோன தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.