Begin typing your search above and press return to search.
கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
குடும்ப தகராறு காரணமாக கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் வயது 42. இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை தர்மபுரி ஹவுசிங் போர்ட்டில் உள்ள தனது வீட்டில் மனைவி இளவரசியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சித்தார்த்தனுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.