ஈ பி எஸ் கார் மீது செருப்பு வீசிய விவகாரம்- அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய விவகாரம்-கடலூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வாகனம் மீது செருப்பு வீசியும், அவரை தாக்க முற்பட்டதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகளை கண்டித்தும், பாதுகாப்பு அளிக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் தலைமையில் கடலூர் லாரன்ஸ் சாலை நான்குமுனை சந்திப்பில் அதிமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சமூக விரோத செயலில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் எனவும், அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.