/* */

திட்டக்குடி அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 4 பேர் கைது

திட்டக்குடி அருகே இரண்டு பெண்களை வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திட்டக்குடி அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 4 பேர் கைது
X

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் அவரது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக ராமநத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலை அருகே பாலமுருகன் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்தபோது இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் பாலமுருகன் வீட்டில் அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், பெரம்பலூர் மாவட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத், பெரம்பலூர் மாவட்டம் வரகூர் கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் பாலமுருகன் இவர்கள் 4 பேரும் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 16 March 2022 11:37 AM GMT

Related News