Begin typing your search above and press return to search.
துர்நாற்றம் வீசும் கடலூர் பஸ் நிலையம்
கடலூர் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.
HIGHLIGHTS
கடலூர் பஸ் நிலையத்தில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல வெளியூர்களுக்கும், கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் டவன் பஸ்கள் என நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணம் செய்யும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது, இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கும், சிறார்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் கடலூர் நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.