Begin typing your search above and press return to search.
தொடர் மழை எதிரொலி: பாதித்த அகல் விளக்கு விற்பனை
கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி அகல்விளக்கு விற்பனை கன மழையினால் மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் வேதனை
HIGHLIGHTS
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அகல்விளக்கு செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபடாத சூழலில், இயந்திரங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கடலூரில் விற்பனைக்கு வந்துள்ளது.
கடலூரில் இரு நாட்களாக மழை பெய்யாத நிலையில் மீண்டும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அகல்விளக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள், மழையால் பொதுமக்கள் யாரும் அகல் விளக்குகள் வாங்க வரவில்லை எனவும் கார்த்திகை தீபத்திருநாள்காக முதலீடு செய்யப்பட்ட பணம் முற்றிலும் வீணாக வேதனை தெரிவித்தனர்.