Begin typing your search above and press return to search.
கடலூரில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி
வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பலரும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.தற்போது வரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 13க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.