ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் கொரோனா நிதியாக வழங்க முடிவு
ஒரு நாள் ஊதியம்
HIGHLIGHTS
தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட சார்பில் அதன் மாநில நிர்வாகி தியாகராஜன் செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னுயிர் குறித்துகூட அச்சம் கொள்ளாமல் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு நிதிச்சுமையை சந்தித்துவருகிறது.
இந்நிலையில், திரை பிரபலங்கள், எம்பிக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஆசிரியர்காளின் ஒரு நாள் ஊதியம் வழங்கவும், முடிவு செய்துள்ளது இதனை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு, கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்பதற்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.