ஊரடங்கின்போது சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தின் 5 மாவட்ட எல்லை சோதனை சவாடிகள் , 18 மாவட்ட உட்சோதனை சாவடிகள், மாவட்ட முக்கிய இடங்களான மார்கெட், பஸ் ஸ்டாண்டு, நகர்புரம் மற்றும் கிராமபுற முக்கிய சந்திப்பு, பஜார் மற்றும் மக்கள் அதிகம் கூடும் 28 இடங்களில் வாகன சோதனை நடைபெறும்.
ரோந்து பணிக்காக ஜி.எஸ்.டி சாலையில் 6 ரோந்து வாகனங்கள்,ஈ.சி.ஆர் சாலையில் 5 ரோந்து வாகனங்கள்,பழைய மஹாபலிபுரம் சாலையில் 2 ரோந்து வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் 1 ரோந்து வாகனமும், 26 காவல் ரோந்து வாகனம் என மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் மூலம் முழு ஊரடங்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 687 காவல் துறையினர் சுழற்சி முறையில் முழு ஊரடங்கு அமுல்படுத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.