செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு : கழுத்தை அறுத்து கொண்ட கணவன்
செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக தன்னைத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் நந்தா ஸ்மிடா செட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை இவரது மகன் வேல்முருகன் வயது நாற்பத்தி ஒன்று இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் மனைவியுடன் சண்டை காரணமாக வேல்முருகன் மதுபோதையில் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.