காதல் விவகாரம்: இளைஞர் படுகொலை
செங்கல்பட்டு அருகே இளைஞர் வெட்டி படுகொலை.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காவனூர் பகுதியில் வசித்து வந்தவர் வீரா (வயது26). இவர் மறைமலைநகர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில் வீராவுக்கு இன்று காலை செல்போனில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தொடர்புகொண்டு, கூடுவாஞ்சேரியிலிருந்து வீட்டை காலி செய்து மறைமலைநகரில் உள்ள புதிய வீட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொத்தேரி ஏரிக்கரையை கடக்கும்பேது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர்கொண்ட மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்துள்ளனர். தப்பிக்க முயற்சித்த வீராவை தப்பிக்க விடாமல் கை,கால் தலை போன்ற பகுதியில் சரமாரியாக மாறி மாறி வெட்டி சிதைத்துள்ளனர். இதில் வீரா ரத்த வெள்ளத்தில் துடித்து அதே இடத்தில் இறந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் வீரா அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வீரா காதலித்த பெண் வீட்டார் கொலை செய்தனரா? அல்லது வீரா காதலித்த பெண்ணை வேறு ஒரு இளைஞர் காதலித்து அதனால் அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை செய்த கும்பலை மறைமலைநகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.