/* */

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போக்குவரத்து ஊழியருக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு போக்குவரத்து ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து.

HIGHLIGHTS

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  போக்குவரத்து ஊழியருக்கு ஆயுள் தண்டனை
X

ஆயுள் தண்டனை அடைந்த வினோத்.

அரியலூர் மாவட்டம், த.மேலூரில் வசிப்பவர் வினோத். இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி மெக்கானிக்கலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 26.01.2020 அன்று இவரது பக்கத்து கிராமமான த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அரியலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்த 20வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த வினோத்தை திருமணம் செய்து செய்து கொள்ள கேட்டபோது வினோத் மாணவியை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றம் சாட்டப்பட்ட வினோத்திற்கு ஆயுள் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

Updated On: 8 Aug 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!