மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போக்குவரத்து ஊழியருக்கு ஆயுள் தண்டனை
அரியலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு போக்குவரத்து ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், த.மேலூரில் வசிப்பவர் வினோத். இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி மெக்கானிக்கலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 26.01.2020 அன்று இவரது பக்கத்து கிராமமான த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அரியலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்த 20வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த வினோத்தை திருமணம் செய்து செய்து கொள்ள கேட்டபோது வினோத் மாணவியை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றம் சாட்டப்பட்ட வினோத்திற்கு ஆயுள் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.