அரியலூரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரியலூர் நகரில் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான நாய்களை பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
HIGHLIGHTS
அரியலூரில் குறைந்த பட்சம் தெருவுக்கு 10 நாய்கள் என அதிகபட்சம் 2ஆயிரம் கும்பல் கும்பலாக சுற்றி வருகிறது. தினமும் ஏதேனும் யாராவது ஒருவர் நாய்களால் கடிபட்டு தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அரியலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நாய்கள் இல்லாத நகராட்சி நிர்வாகமாக கொண்டு வரப்பட வேண்டும்.
பல நேரங்களில் நாய்கள் துரத்துவதும் அவற்றிடம்மிருந்து மீள்வதே பெரிய சாதனையாக இருக்கிறது. பகல் இரவு அதிகாலை என்று பாகுபாடு இல்லாமல் நாய்கள் அரியலூர் நகர மக்களை துன்புறுத்தி வருவது வேதனை அளிக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரியவில்லை.
மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி , எம்.எல்.ஏ, வார்டு கவுன்சிலர்கள் கூட்டு முயற்சியில் உடனடியாக நாய்களைப் அரியலூர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முன் வந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.
அரியலூர் நகராட்சி உட்பட்ட தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது இதனால் பள்ளி குழந்தைகள் பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிய வில்லை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வரதராஜன், ராமஜெயவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.