Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே ரூ.2.25 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு: அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ராவுத்தன்பட்டி பிரிவு ரோட்டில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் முலம் ரூ.2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சி, ராவுத்தன்பட்டி பிரிவு ரோட்டில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் முலம் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, ராம்கோ சிமெண்ட் ஆலைத்தலைவர் மதுசூதனன் குல்கர்ணி, மூத்த உபதலைவர் நிர்வாகம் எஸ்.ராமராஜ், பொதுமேலாளர்கள் ஏ.ஜானசன், கே.கணேஷ்ராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.