Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமான சாலைகளில் நாற்று நடும் போராட்டம்
அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமான சாலைகளை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளன.
Updated On: 5 Oct 2021 8:42 AM GMTஇதனால் சேறும் சகதியுமாக உள்ள தெருக்களில் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், போதுமான அளவிற்கு குடிநீர் வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.