நிதியுதவி பெற விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் என கலெக்டர் கூறியுள்ளார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்படவில்லை எனில் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் 31.03.2022க்குள் இணைத்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.