கலியுகவரதராஜபெருமாள் கோவிலில் தரிசனம்: பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை
கொரோனாபரவலை கட்டுப்படுத்த கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலில் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
HIGHLIGHTS
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் வரும் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் புகழ்பெற்ற பெருமான்கோவிலாகும். இக்கோவிலுக்கு அரியலூரில் மட்டுமல்லாமல் சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், தஞ்சாவூர், ஆத்தூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வருவார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி, கல்லங்குறிச்சூ கலியுகவரதராஜ பெருமாளில் ஆடி ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் ஆடி பூரமான 11-ஆம்தேதியும், வருகின்ற வெள்ளி, சனி, ஞாயிற்று(13, 14,15 ஆகிய தேதிகள்) ஆகிய கிழமைகள் உள்பட மொத்தம் 5 நாடகளுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், வழக்கம் போல பெருமாளுக்கு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.