/* */

சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் அளித்து பாராட்டினார்.

HIGHLIGHTS

சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
X

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல்நிலைய குற்ற வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த அருள் செல்வம் என்கிற கொளஞ்சி (32) என்பவரை விரைந்து கைது செய்ய உதவி புரிந்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் இயேசுராமன் மற்றும் முதல் நிலை காவலர் சுந்தராஜன் ஆகியோருக்கும்,

குவாகம் காவல் நிலைய சரகத்தில் 28.04.2022 அன்று இரவு ரோந்து பணியில் இருந்த போது மணல் திருடி வந்தவர்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தும் மணல் திருடியவரை குவாகம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்ய உதவி புரிந்தமைக்காக உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர் ராஜகண்ணன் ஆகியோரை

மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Updated On: 1 May 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!