Begin typing your search above and press return to search.
அரியலூர் கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனை தொடக்கம்
அரியலூர் மாவட்ட புதிய கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக அரியலூர் இரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை இன்று (16.12.2021) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, சிறப்பித்து, முதல் விற்பனையினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், கூட்டுறவு விற்பனை சங்க வேளாண்மை இயக்குநர் ஆர்.பழனியப்பன், துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்துகொண்டனர்.