அரியலூர்: உள்ளாட்சித்தேர்தலில் 68 பதவிக்கு 321 வேட்பாளர்கள் போட்டி
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 68 பதவிகளுக்கு 321 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
HIGHLIGHTS
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும், வரதராஜப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் ஆக மொத்தம் 69 பதவிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் அரியலூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 137 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 3 நபர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 45 மனுதாரரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இறுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 89 ஆகும்.
அதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 144 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர். அதில் 4 நபர்களின் வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்டன. 32 மனுதாரரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இறுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 108 ஆகும்.
உடையார்பாளையம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 63 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர் அதில் 8 மனுதாரரின் வேட்பு மனு திருப்ப பெறப்பட்டன. 1 வார்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆகும்.
அதே போல் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 75 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர், 5. மனுதாரரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இறுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 70 ஆகும்.
இறுதியாக அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 419 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 7 நபர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 90 மனுதாரரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 1 வார்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இறுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 321 ஆகும்.