Begin typing your search above and press return to search.
அரியலூரில் கொரோனா கட்டளை மையத்தை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு
அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்தை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா கட்டளை மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து கொரோனா தொடர்பான சந்தேகங்கள், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அழைப்புகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து,அவற்றை நிறைவேற்றிட வேண்டும் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.