அரியலூர்: கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக உறுதி ஏற்பு
அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் “எனக்கு வேண்டாம்” என்று கல்லூரி மாணாக்கர்கள் எஸ்.பி முன்னிலையில் உறுதி ஏற்றனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருட்கள் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், சமூகத்தில் அதன் தாக்கம், சமூக சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
போதைப்பொருள் எதற்கும் தீர்வாகாது மன அழுத்தத்தை குறைக்க போதைப் பொருளை நாடுவது என்பது தவறான ஒரு முடிவாகும். போதைக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று அது அழித்தலாகும்.
பின்னர் இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அனைத்து மாணாக்கர்களும் போதைப் பொருட்கள் எனக்கு வேண்டாம் என்று உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிலையங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.