திருவண்ணாமலையில் கோடை கால இலவச மல்யுத்த பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் தாெடங்கியது.

Update: 2022-05-21 01:26 GMT

கோடைகால இலவச பயிற்சி முகாம், மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் சீனி கார்த்திகேயன் முகாமை துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் 10 நாட்கள் கோடைகால மல்யுத்த இலவச பயிற்சி முகாம் திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி பள்ளியில் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட மல்யுத்த சங்க செயலாளரும் மல்யுத்த பயிற்சியாளருமான ஏ.அருண்குமார், பொருளாளர் பி.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த பயிற்சி முகாம் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.

பயிற்சியை திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் சீனி.கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். பயிற்சி முடிவில் மல்யுத்த வீரர்களுக்கு சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட மல்யுத்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News