தூத்துக்குடியில் கனமழைக்கு வீடு இடிந்து மின்சாதன பொருட்கள் சேதம்

தூத்துக்குடியில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து மின்சாதனை பொருட்கள் சேதமடைந்தது.

Update: 2021-05-09 13:15 GMT

தூத்துக்குடியில் பெய்த மழையில் இடிந்து விழுந்த வீடு.

தூத்துக்குடி புது தெரு ஜார்ஜ் சந்துவை சேர்ந்தவர் பிரைட்டன்(வயது 70), மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.


ஜார்ஜ் சந்தில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வீட்டில் பிரைட்டன் தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தூத்துக்குடியில் பெய்த கன மழையினால் இவரது வீட்டின் மேற்கூரையில் இருந்த விரிசல் வழியே வீட்டுக்குள் மழைநீர் வழிந்ததாக தெரிகிறது.

இதனால் பிரைட்டன் தன் பேரக்குழந்தைகளுடன் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், நள்ளிரவு 2.30 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.


இந்த விபத்தில் வீட்டுக்குள் இருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, பீரோக்கள், சோபா மற்றும் பிற மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News