சாலை விபத்தில் விவசாயிகள் இருவர் பலி

தேனி அருகே சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. காவல்துறையினர் விசாரணை.

Update: 2021-03-07 17:37 GMT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45) பழனிசாமி (55). விவசாயிகளான இருவரும் இன்று மாலை தேனிக்கு வந்து சணல் சாக்குகள் வாங்கிக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்திலே வீடு திரும்பினர். அப்போது அரண்மனைப்புதூர் அடுத்துள்ள கோட்டைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம், இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ இது குறித்து பழனி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News