சசிகலா வரவேற்பு போஸ்டர்- ஆண்டிபட்டியில் பரபரப்பு

Update: 2021-01-30 17:43 GMT

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.‌ இதையடுத்து அவரை  வரவேற்க அமமுக வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சசிகலாவின் விடுதலையை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

     இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்ன ராஜா என்பவர் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டி உள்ளார். அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலா வரவேற்பு போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News