கொல்லிமலைப் பகுதியில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்

கொல்லிமலை பகுதியில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-03 02:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த காசிமணி நாமகிரிப்பேட்டை அருகே உள்ள திருமனூர் பீட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முள்ளுக்குறிச்சி வனக்காப்பாளராக பணியாற்றி வந்த புகழேந்தி, காரவள்ளி சோதனை சாவடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதேபோல திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கொல்லிமலை அடிவார பகுதியான புளியஞ்சோலை வனக்காப்பாளராக பணியாற்றி வந்த கவாஸ்கர் தலைமலை பகுதிக்கும், அங்கு பணியாற்றிய மணிகண்டன் புளியஞ்சோலை பீட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நாமக்கல் மாவட்டவன அலுவலர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News