ஐப்பசி கிருத்திகையையொட்டி நாமக்கல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Update: 2021-10-23 23:30 GMT

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு, மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத கிருத்திகை விழா முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோயில், காந்திநகர் ஸ்ரீ பாலதண்டாயுதபானி திருக்கோயில், மோகனூர் காந்தமலை முருகன் கோயில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், கருமலை முருகன் கோயில், கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதணை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கோயில்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News