உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கல்

உலக முட்டை தின விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டன.

Update: 2024-10-11 10:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற உலக முட்டை தினவிழாவில், கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், பொதுமக்களுக்கு இலவச முட்டைகளை வழங்கினார்.

உலக முட்டை தின விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டன.

முட்டையில் உள்ள சத்துக்கள் குறித்தும், முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், உலக முட்டை தின விழா நாமக்கல்லில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க தலைவர் சிங்கராஜ் விழாவுக்கு தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இலவச முட்டைகளை வழங்கி, முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து பேசினார். உலக முட்டை தினத்தை முன்னிட்டு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க இணை செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் சசிக்குமார், இயக்குனர்கள் துரை, வல்சன், ஆனந்தன், பூபதி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News