சேந்தமங்கலம் பகுதியில் 18ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 18ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-16 09:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 18ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால், சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர்,பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காபட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News