அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Protests Today - அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-28 02:00 GMT

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protests Today - அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அதில் உள்ள பாதகமான விஷயங்களைக் கூறியும் கோஷம் எழுப்பப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், நகர தலைவர் மோகன், வட்டார தலைவர் இளங்கோ, பாண்டியன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

*திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அக்னி பாத் திட்டத்தை கைவிட கோரியும், ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறையின் போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. பொருளாளர் பொன்னுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News