நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி
நாமக்கல்லில், தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில், தெருவோர வியாபாரிகளுக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வங்கி முதன்மை கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், 10 தெருவோரக்கடை வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம், 3 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.