நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 19 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Update: 2021-09-18 09:30 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

தனியார் துறை நிறுவனங்களும், அங்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம்,  நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இந்த வாரம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீதா தலைமை வகித்தார். இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு தேர்வு செய்தனர்.

இம்முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 46 பேர் பங்கேற்றனர். அவர்களில் மாற்றத்திறனாளிகள் உள்ளிட்ட 19 பேர், பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

Tags:    

Similar News