நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-09-29 01:45 GMT

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,202 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, ஈரோடு, அவிநாசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 711 முதல் ரூ.8 ஆயிரத்து 2 வரையிலும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 700 முதல் ரூ.9 ஆயிரத்து 500 வரையிலும், கொட்டு ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 799 முதல் ரூ.5 ஆயிரத்து 416 வரையிலும் ஏலம் போயின.

Tags:    

Similar News