நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-10 07:30 GMT

நாமக்கல் டிரினிட்டி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மோகித், சாய்ராம், யோஷ்னா ஆகியோர்.

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதிய மாணவர் மோகித் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100. இப்பள்ளி மாணவர் சாய்ராம் 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடம் பெற்றுள்ளார். மாணவி யோஷ்னா 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார்.

இப்பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 3 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் ஒருவரும், சமூக அறிவியில் பாடத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைவர் டாக்டர் குழந்தைவேல், செயலாளர் சந்திரசேகரன், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News