நாமக்கல்லில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்லில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-05-13 07:00 GMT

பைல் படம்.

நாமக்கல்லில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் கோட்டை பகுதியில், நரசிம்மசாமி கோயில் எதிரில் தனியார் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் காவி நிற வேஷ்டி அணிந்திருந்தார். அடையாளம் தெரியாத அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News