அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-27 13:45 GMT

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை படியும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தல்படியும், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News