வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க மாணவர்களுக்கு பயிற்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-04 05:15 GMT

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான மாணவர்களுக்கான  பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான பயிற்சியினை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். சுவாமி வேதானந்த, அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாடிபட்டி துணை வட்டாட்சியர் மீனாட்சf சிறப்புரை ஆற்றினார்.தேர்தல், புள்ளி விவர இடுகையாளர்கள் கணேசன் மற்றும் பாண்டியன் ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான பயிற்சியினை மாணவர்களுக்கு இணையதளம் மூலம் செய்து காட்டினர். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறை பொறுப்பு துறை தலைவர் பாரதிராஜா நன்றி உரையாற்றினார். வணிகவியல், கணினி பயன்பாட்டு துறை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News