மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து தொழிலாளி மரணம்
Worker dies after wall collapses during construction
மதுரையில் சுவர் இடிந்து விபத்து தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை விரகனூர் பகுதியில் விவேக் என்பவரின் திருமண மண்டப கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில்,தொழிலாளி ஆறுமுகம் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர். இந்த கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தால், விரகனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மதுரை தெப்பக்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.