கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்பட்டது.

Update: 2022-01-17 17:30 GMT
இனிப்பு வழங்கும் அதிமுகவினர்.

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக நிறுவன தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News