கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை

வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.

Update: 2021-11-13 03:30 GMT

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

விவசாயிகள் பருவ நிலை மாற்றத்தால் நஷ்டம் ஏற்படாமல் இருக்க தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது . தற்போது நிலவி வரும் பருவமழையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரினை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம்.   

எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் காப்பீடு செய்ய வாழை , மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு 28.02.2022 வரையிலும், வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு 31.01.2022 வரையிலும், விண்ணப்பிக்க பிரீமியம் தொகையாக ஏக்கர் 1-க்கு வாழைக்கு ரூ .3,198 / -ம் , வெங்காயத்திற்கு ரூ .1,952 / -ம் மரவள்ளிக்கு ரூ .1,509 / -ம் தக்காளிக்கு ரூ .801 / -ம் மற்றும் மிளகாய்க்கு ரூ .1,106 / -ம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்து  கொள்ளலாம்.

மேலும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர்களின் பரப்பளவு, இ-அடங்கலை பதிவு செய்தலை உறுதிபடுத்திக் கொள்ளேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News