கரூர் அருகே 2 கார் மோதி விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

கரூர் அருகே எதிர் எதிரே வந்த இரு கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-01-18 07:45 GMT

விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் பஸ்.

கோவையிலிருந்து  கரூர் வழியாக ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கரூர் எல்லைகாட்டுவலசு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றோரு கார் மீது மோதியது. எதிரே வந்த காரை தாராபுரம் பகுதியினை சேர்ந்த தூரம்பாடி கருப்புசாமி என்பவரது மகன் லோகநாதன் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் மோதிய விபத்தினையும் தாண்டி மற்றொரு அரசு பேருந்தில் கார் மோதி நின்றது. இந்த அரசுப்பேருந்தானது, ஊட்டியிலிருந்து திருச்சிக்கு கரூர் வழியாக செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரது நிலை மோசமானதாக உள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது., உயிரிழந்தவர் யார் என்ற விவரம் சரியாக தெரியவரவில்லை. விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News