மலர் கொடுத்து ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு மலர் கொடுத்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாமக , அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

Update: 2021-03-30 02:30 GMT

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை பணிக்காக அரசு தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட  ஆயிரக்கானக்காணோர் ரயில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் மகேஷ்குமார் , அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் KUSசோமசுந்தரம் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்று மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்கு சேகரித்தனர்.

மேலும் ரயில் பயணிகளிக்கு கூடுதல் ரயில் சேவை , பெண்களுக்கு கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகள் இணைக்க ஏற்பாடு , முதியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டி என அனைத்தும் பெற்று தர உறுதியளிப்பதாக கூறி ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News