ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 45வது வட்ட மாமன்ற உறுப்பினர் அன்னதானம்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2022-02-25 06:30 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 45வது வார்டு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி 45 வது வார்டு அதிமுக வெற்றி வேட்பாளர் சாந்தி சீனிவாசன், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு,  மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு,  காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஸ்டாலின், 45 வந்து வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சீனுவாசன், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக், தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சம்பத் , சசிகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News