காஞ்சிபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

காஞ்சிபுரம் அருகே வையாவூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை அரசு உடனே சுத்தப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-16 02:30 GMT

காஞ்சிபுரம் நகரினை ஓட்டி அமைந்துள்ளது வையாவூர் கிராமம். புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இக்கிராமம் உள்ளது.இங்குதான்  கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வையாவூர் ஏரியாகும்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ஏரியின் நீர்மட்டம் குறைவதாலும், கடும் கோடை காரணமாக ஏரியில் வளர்ந்து வரும் மீன்கள் செத்து  மிதந்து கரையோரம் குவிந்துள்ளது.

இறந்து கிடக்கும் மீன்களை காகம், கொக்கு உள்ளிட்டவைகள் எடுத்து சென்று கிராம பகுதியில் போட்டுவிட்டு செல்வதாலும் கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மீன்கள்  செத்து உள்ளதால் காற்று திசை மாறுபாடு காரணமாக 24 மணி நேரமும் துர்நாற்றம் அதிக அளவில் வீசுவதால் குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்..

மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது மேலும் குடிநீர் ஆதாரததிற்கும் பாதிப்பு எழுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

Similar News