அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் தபால் வாக்களிப்பு

Update: 2021-04-04 07:00 GMT

தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இடைவெளியின் போது ஆர்வத்துடன் காத்திருந்து அரசு ஊழியர்கள் தபால் வாக்களித்தனர்.

சட்டமன்ற தேர்தல் 2021 ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து 2-வது மறுப்பயிற்சி இன்று காஞ்சிபுரத்தில் 2 மையங்களிலும் , ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மீனபாக்கம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.

இதில் அலுவலர்களுக்கு வாக்குபதிவுக்கு முந்தைய நாள் வாக்கு சாவடி மையம் அமைத்தல் மற்றும் வாக்குபதிவு அன்று கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கப்பட்டது .மேலும் ஊழியர்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் கையாளும் விதம் மற்றும் பழுது ஏற்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது. அவர்களுக்கும் மாதிரி வாக்குபதிவு நிகழ்த்தி காட்டி சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. இதன்பின் நான்கு தொகுதிகளிலும் ஊழியர்கள் தங்களின் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

Tags:    

Similar News