ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் மற்றும் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-05-10 08:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை நல சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த எஸ்பி சண்முகத்திற்கு பொன்னாடை போர்த்திய நிர்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நல சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை எஸ்.பி சண்முகம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் உணவுகளை வழங்கினர்.

தமிழகத்தில் தற்போது கோடை கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.

இந்நிலையில் பல்வேறு வேலை நிமித்தமாக சாலைகளில் வரும் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்க தலைவர் எம்.சேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த தண்ணீர் பந்தலை , காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மோர் , புளியோதரை, தயிர்சாதம் போன்ற உணவு வகைகளும், ரஸ்னா , லெமன் குளிர்பானங்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் வரிசையில் நின்று உணவுகளை வாங்கியும் குளிர்பானங்களை குடித்தும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் , ஓய்வு பெற்ற காவல் துறை நல சங்கத்தின் செயலாளர் தட்சிணாமூர்த்தி ,பொருளாளர் எ.மணோகரன், இணை தலைவர் ராஜேந்திரன் ,கொள்கை பரப்பு செயலாளர் கண்ணபிரான் , வெங்கடேசன், உத்தமராஜன் , மாசிலாமணி , பாபு , ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News