காஞ்சிபுரம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. .

Update: 2022-08-09 15:15 GMT

தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் தனது மனைவி நாகலட்சுமி (37) விஜயுடன் (17) மற்றும் ஓருமகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கிராமத்தில் பெரிய விவசாயி ஆன சரவணன் கொஞ்சம் கொஞ்சமாக தனது சொத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததும் தன்னால் அவமானத்தை தாங்கிக் கொள்ளாத நிலையில் தனது மனைவி மற்றும் மகனுடன் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை முயற்சிக்கு முயன்றுள்ளனர்.

மயங்கி விழுந்த கிடந்த அவர்களை அவர்களது உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து அவர்களுக்கு ஒரு மணி நேரம் முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் கிராமத்தில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News